Filtra per genere
- 68 - மறுமையில் காப்பாற்றும் சூராக்கள்Sat, 30 Apr 2022 - 13min
- 67 - லைலத்துல் கத்ர் - ஒரு நினைவூட்டல்Sat, 23 Apr 2022 - 14min
- 66 - நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்Sun, 10 Apr 2022 - 10min
- 65 - நோன்பை விடுவதற்குப் பரிகாரம்
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.
நூல் : புகாரி 4507
Sun, 10 Apr 2022 - 04min - 64 - நோன்பு துறத்தல்Mon, 04 Apr 2022 - 04min
- 63 - நோன்புடைய நிய்யத்Mon, 04 Apr 2022 - 05min
- 62 - ஸஹர் நேர தவறுகள்Sun, 03 Apr 2022 - 08min
- 61 - ஸஹர் உணவு
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1923
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 576, 1134, 1921, 575
Sun, 03 Apr 2022 - 03min - 60 - நோன்பின் நேரம்
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!
பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!
திருக்குர்ஆன் 2:187
நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி 1957
Sun, 03 Apr 2022 - 06min - 59 - ரமலானின் சிறப்புகள்
ரமலான் மாதம் எத்தகையது என்றால் நேர்வழியை தெளிவுபடுத்தி (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டக்கூடிய குர்ஆன் அம்மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழியாக அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர்கள் அதில் நோன்பு நோற்க வேண்டும்.
அல்குர்ஆன் (2:186)மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் (97 :1-5)Sat, 02 Apr 2022 - 11min - 58 - நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான்.
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன.
நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1904
Sun, 27 Mar 2022 - 07min - 57 - நோன்பின் போது கடைபிடிக்க வேண்டியவை
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903
Sun, 27 Mar 2022 - 03min - 56 - நோன்பின் நோக்கம்Sun, 27 Mar 2022 - 06min
- 55 - வியத்தகு குர்ஆன் - பகுதி 8 [குர்ஆனின் மொழி]
சஹாபாக்கள் அரபு மொழியின் வீழ்ச்சியை ஆரம்ப காலத்திலேயே கவனித்தனர். அலி (ரலி) அவர்கள் அவருடைய ஆட்சிக்காலத்தில் ஒருமுறை அரபு குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் பேசுவதையும் பார்த்து, இவர்கள் பேசுவது அரபுகளுடைய மொழி இல்லை என்று கூறினார்.
நபியவர்கள் காலத்திற்கு பிறகு இஸ்லாத்தில் மூன்று பாதுகாப்பு இயக்கங்கள் தோன்றுகிறது
1. குர்ஆனைப் பாதுகாக்கவும்
2. ஹதீஸைப் பாதுகாக்கவும்
3. அரபு மொழியைப் பாதுகாக்கவும்
அந்த காலகட்டத்தில் நல்ல தூயமையான அரபியைப் பெற விரும்பினால், பாலைவனத்திற்கு சென்று அங்கிருக்கக்கூடிய நாடோடி மற்றும் கிராமத்து அரேபியர்களிடத்தில் பேச வேண்டும். இமாம் ஷாபி, அஸ்மாயீ போன்றவர்கள் அந்த மொழியை அதன் தூய்மையில் வடிவத்தில் பாதுகாக்க நிறைய இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டனர்.
Sun, 19 Dec 2021 - 19min - 54 - வியத்தகு குர்ஆன் - பகுதி 7 [தொன்மையான அரபு மொழி]Sun, 05 Dec 2021 - 12min
- 53 - வியத்தகு குர்ஆன் - பகுதி 6 [அரபு மொழி]Sat, 20 Nov 2021 - 13min
- 52 - வியத்தகு குர்ஆன் - பகுதி 5 [ஆயத்]Sun, 14 Nov 2021 - 10min
- 51 - வியத்தகு குர்ஆன் - பகுதி 4 [ஆயத்]Sun, 14 Nov 2021 - 08min
- 50 - வியத்தகு குர்ஆன் - பகுதி 3 [ஆயத்]
ஆயா என்றால் என்ன?
ஆயாவை ‘வசனம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது?
ஆயாவை வாக்கியம் என்றோ அல்லது வரி என்றோ ஏன் மொழிபெயர்க்க முடியாது?
ஒவ்வொரு ஆயாவும் ஒரு வர்த்தயை விடவோஅல்லது ஒரு வாக்கியத்தை விடவோ சிறியதாக இருக்கலாம்
அல்லது பல ஆயத்துக்கள் சேர்ந்து ஒரு வாக்கியத்தை உருவாக்கலாம்
அல்லது பல வாக்கியங்கள் சேர்ந்தது கூட ஒரு ஆயத்தாக இருக்கலாம்.
Sun, 14 Nov 2021 - 06min - 49 - வியத்தகு குர்ஆன் - பகுதி 2 [ஸூரா]
சூரா என்றால் என்ன?
· குர்ஆன் 114 சூராக்களால் ஆனது
· சூராவை ‘அத்தியாயம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது?
· ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் மீண்டும் மீண்டும் வராது.
· ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் முந்தைய அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
· சூராக்களைப் போல் அல்லாமல் அத்தியாயங்கள் ஒரு காலவரிசை வரிசையில் அமைந்திருக்கும்.
· அத்தியாயங்களின் வரிசையை மாற்றினால் ஒரு புத்தகம் அர்த்தமற்றுப் போய்விடும். ஆனால் சூராக்கள் அப்படியல்ல.
· சூராக்கள் காலவரிசைப்படி வரிசைப்படுத்தப்படவில்லை.
· குர்ஆனுக்கென்று ஒரு தனிப்பட்ட அமைப்பு உள்ளது.
· அத்தியாயங்களின் தலைப்பு அந்த அத்தியாயத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்லும். ஆனால் ஒரு சூராவின் தலைப்பு அந்த சூரா முழுவதும் பேசப்படுவதில்லை.
· எனவே, நீங்கள் குர்ஆனை வேறு எந்த இலக்கியங்களுடனும் ஒப்பிட முடியாது. குர்ஆனுக்கு அல்லாஹ் வகுத்த அதன் சொந்த தரநிலை உள்ளது.
Sun, 07 Nov 2021 - 09min - 48 - வியத்தகு குர்ஆன் - பகுதி 1 [இலக்கியம்]Sun, 07 Nov 2021 - 10min
- 47 - வியத்தகு குர்ஆன் - தொடர் அறிமுகம்
குர்ஆனுடைய மொழிபெயர்ப்பைப் படிக்கும் போது உங்களுக்குள் பல கேள்விகள் எழும்
• ஏன் குர்ஆனில் ஓரிடத்தில் சொல்லப்பட்ட செய்திகள் திரும்பத் திரும்ப மற்ற இடங்களில் வருகிறது?
• ஏன் குர்ஆன் ஒரு காலவரிசைப்படி இல்லை?
• ஏன் சில அத்தியாயங்கள் சிறியதாகவும், சில நீளமாகவும் உள்ளன?
• அத்தியாயங்களும் ஏன் ஒரு பொருள் வரிசைப்படி இல்லை?
• குர்ஆனில் சொல்லப்படும் கதைகளும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிறது. ஏன் ஒரு தொடராக இல்லை?
இப்படி குர்ஆனை படிக்கும் போது உங்கள் மனதில் தோன்றும் கேள்விகள் மற்ற புத்தகங்களை படிக்கும்போது இருப்பதில்லை. ஏன்?
உண்மையிலேயே இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் குர்ஆனை தனித்துவமாக்குகிறது மற்றும் இந்த குர்ஆன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதற்க்கான பதில்களைத்தான், இந்த தொடர் முழுவதும் விரிவாக கேட்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
Mon, 01 Nov 2021 - 05min - 46 - அல்லாஹ்விற்காக அன்பு காட்டுதல்
அல்லாஹ்வின் அடியார்களில் சில மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்படமாட்டார்கள் என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள்.
அறிவிப்பவர் : உமர் பின் அல்ஹத்தாப் (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3060)
Sun, 31 Oct 2021 - 16min - 45 - இறந்துவிட்ட பெற்றோருக்காக செய்யக்கூடிய நன்மைகள்
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் :
ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள்.
நூல் : புகாரி 1852
Sat, 28 Aug 2021 - 17min - 44 - முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு
وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)
நூல் : முஸ்லிம்
Mon, 16 Aug 2021 - 14min - 43 - ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு - 2
உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து ‘வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள். நூல்: ஹாகிம் (4287)
Tue, 10 Aug 2021 - 18min - 42 - ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு - 1
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 9:36)
Tue, 10 Aug 2021 - 11min - 41 - குர்பானியின் சட்டங்கள் - 5Mon, 19 Jul 2021 - 11min
- 40 - பெருநாள் தொழுகை சட்டங்கள் - 2Sun, 18 Jul 2021 - 13min
- 39 - பெருநாள் தொழுகை சட்டங்கள் - 1Sun, 18 Jul 2021 - 07min
- 38 - அரஃபா தின நோன்பு
அரபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்.’
அறிவிப்பாளர்: அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: முஸ்லிம் 2151
Sun, 18 Jul 2021 - 05min - 37 - அரஃபா தினம்Sat, 17 Jul 2021 - 08min
- 36 - துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்
“ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள். (புஹாரி-969, திர்மிதி-688)
Sun, 11 Jul 2021 - 08min - 35 - குர்பானியின் சட்டங்கள் - 4Sat, 10 Jul 2021 - 05min
- 34 - குர்பானியின் சட்டங்கள் - 3Wed, 07 Jul 2021 - 06min
- 33 - குர்பானியின் சட்டங்கள் - 2Sun, 04 Jul 2021 - 05min
- 32 - குர்பானியின் சட்டங்கள் - 1
குர்பானி ஏன் கொடுக்க வேண்டும்?
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம் என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
அல்குர்ஆன் (37 : 100-111)
Sun, 04 Jul 2021 - 10min - 31 - விடைபெறும் ரமலானே!Tue, 11 May 2021 - 15min
- 30 - மூன்று வகையினர் - பகுதி 2Mon, 10 May 2021 - 17min
- 29 - மூன்று வகையினர் - பகுதி 1Sun, 09 May 2021 - 15min
- 28 - அல்லாஹ்வின் வருகைSat, 08 May 2021 - 17min
- 27 - மஹ்ஷரின் மனிதர்கள் - பகுதி 2Fri, 07 May 2021 - 19min
- 26 - மஹ்ஷரின் மனிதர்கள் - பகுதி 1
எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும்,
சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும்.
அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (அதாவது, துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
இவர்கள்தாம் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.
(அல்குர்ஆன்: 80:38-42)
Thu, 06 May 2021 - 16min - 25 - அல்கவ்ஸர் எனும் நீர் தடாகம்
(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6579 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
Wed, 05 May 2021 - 17min - 24 - இரண்டாம் ஸூர் ஊதப்படும் போதுTue, 04 May 2021 - 18min
- 23 - முதல் ஸூர் ஊதப்படும் போதுMon, 03 May 2021 - 13min
- 22 - தஸ்பீஹ் தொழுகை ஒரு விளக்கம்
(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் (பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸாயீ
Mon, 03 May 2021 - 09min - 21 - பித்அத் மற்றும் நபில் - என்ன வேறுபாடு?
லைலத்துல் கத்ர் அமல்கள் என்ற பதிவில் சொல்லப்பட்ட செய்திகளுக்கான விளக்கம்.
1. பித்அத் என்றல் என்ன?
2. சுன்னத்தான வணக்கங்கள் என்றல் என்ன?
3. நபிலான வணக்கங்கள் என்றல் என்ன?
4. நபிலுக்கும் பித்அத்திற்கும் என்ன வேறுபாடு?
5. ஒரே தொழுகையில் ஒரே சூராவை இரண்டுமுறை ஓதலாமா?
6. ஒரே ரக்அத்தில் ஒரே சூராவை பலமுறை ஓதலாமா?
Sun, 02 May 2021 - 19min - 20 - மறுமை நாள்Sat, 01 May 2021 - 12min
- 19 - லைலத்துல் கத்ர் அமல்கள்Fri, 30 Apr 2021 - 16min
- 18 - லைலத்துல் கத்ர்Thu, 29 Apr 2021 - 16min
- 17 - கப்ருடைய காட்சிகள் - பகுதி 2Wed, 28 Apr 2021 - 18min
- 16 - கப்ருடைய காட்சிகள் - பகுதி 1Tue, 27 Apr 2021 - 14min
- 15 - தீயவர்களின் மரணம்Mon, 26 Apr 2021 - 13min
- 14 - நல்லோர்களின் மரணம்Sun, 25 Apr 2021 - 14min
- 13 - ஜகாத்தை உறவினர்களுக்கு கொடுக்கலாமா?Sat, 24 Apr 2021 - 08min
- 12 - ஜகாத் யாருக்கு கொடுக்க வேண்டும்?Sat, 24 Apr 2021 - 14min
- 11 - திருக்குர்ஆனின் பிற்கால சேர்க்கைகள் - பகுதி 2Wed, 21 Apr 2021 - 14min
- 10 - திருக்குர்ஆனின் பிற்கால சேர்க்கைகள் - பகுதி 1Tue, 20 Apr 2021 - 15min
- 9 - திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - பகுதி 2
உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் 'இஸ்தன்புல்' நகரத்தில் உள்ள Topkapi Palace அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் 'தாஷ்கண்ட்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
Mon, 19 Apr 2021 - 13min - 8 - திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - பகுதி 1
இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். [அல்குர்ஆன் 29:49]
Sun, 18 Apr 2021 - 17min - 7 - திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்-குர்ஆன் 2:185)
Sat, 17 Apr 2021 - 35min - 6 - அல்லாஹ்விற்குரிய நோன்பில் மனத்தூய்மை
அல்லாஹ் கூறுகிறான்,
நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக! “அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களான – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). (அல்குர்ஆன் 6:162, 163)Fri, 16 Apr 2021 - 15min - 5 - பாவமன்னிப்பிற்கான மாதம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போதுஇ கீழ் வானிற்கு இறங்கிவந்து, ‘நானே அரசன்; நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்’என்று கூறுகிறான். ஃபஜ்ர் நேரத்தின் வெளிச்சம் வரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான். (முஸ்லிம் – 1387)
Thu, 15 Apr 2021 - 13min - 4 - அல்லாஹ்வின் சிம்மாசனம்Wed, 14 Apr 2021 - 13min
- 3 - அர்ஷின் நிழல் பெரும் ஏழு நபர்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதிமிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 5. இறைவழியில் நட்புகொண்ட இருவர். 6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்“ என்று கூறியவர். 7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 6806
Tue, 13 Apr 2021 - 15min - 2 - ரமலான் இரவுத் தொழுகை சட்டங்கள்
யார் இறை நம்பிக்கையுடனும், நன்மை நாடியும் ரமலானில் இரவில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்திய பாவம் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி).
Mon, 12 Apr 2021 - 30min - 1 - சொர்கத்தில் ஒரு மாளிகை கட்ட வேண்டுமா?
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரென்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகிறாரோ அதற்காக அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நான் கேட்டதிலிருந்து அந்த பன்னிரென்டு ரக்அத்களை கை விட்டதேயில்லை. (உம்மு ஹபீபா (ரலி) முஸ்லீம் 1319)
Mon, 12 Apr 2021 - 23min
Podcast simili a <nome>
- Global News Podcast BBC World Service
- El Partidazo de COPE COPE
- Herrera en COPE COPE
- The Dan Bongino Show Cumulus Podcast Network | Dan Bongino
- Es la Mañana de Federico esRadio
- La Noche de Dieter esRadio
- Hondelatte Raconte - Christophe Hondelatte Europe 1
- Dateline NBC NBC News
- 財經一路發 News98
- La rosa de los vientos OndaCero
- Más de uno OndaCero
- La Zanzara Radio 24
- L'Heure Du Crime RTL
- El Larguero SER Podcast
- Nadie Sabe Nada SER Podcast
- SER Historia SER Podcast
- Todo Concostrina SER Podcast
- 安住紳一郎の日曜天国 TBS RADIO
- TED Talks Daily TED
- アンガールズのジャンピン[オールナイトニッポンPODCAST] ニッポン放送
- 辛坊治郎 ズーム そこまで言うか! ニッポン放送
- 飯田浩司のOK! Cozy up! Podcast ニッポン放送
- 吳淡如人生實用商學院 吳淡如
- 武田鉄矢・今朝の三枚おろし 文化放送PodcastQR